தமிழகத்தில் இருந்து தேர்வான சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதில் தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 55 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மேலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13ஆம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 16ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 18. மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.