காரைக்குடி,
காரைக்குடி அருகே, உள்ள தலகாவூர் ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி கனிமொழி வயது 30.
இந்த நிலையில் கனிமொழி அமராவதிப் புதூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது.
தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை வீட்டில் இருந்த உறவினர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.