தமிழக ஏற்றுமதி நிறுவனங்கள் கடன் திருப்பி செலுத்த அவகாசம்

சென்னை,


கொரோனா வைரஸின் தாக்கத்தால் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப் பை உண்டாகியுள்ளது.  ஏற்றுமதி நிறுவனங்களு க்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய வர்த்தகர்கள் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் நாட்டு வர்த்தகர்கள் தமிழக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுத்த ஆர்டர்களை இரண்டு மாதம் வரை தாமதமாக அனுப்பி வைக்க கோருகின்றனர்.


 ஏற்கனவே தயாரித்து அனுப்பி வைத்த ஆர்டர்களுக் கான தொகையையும் தாமதமாகவே கிடைக்கும் நிலை உள்ளது. அதனால் ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போதைய நெருக்கடி யான சூழ் நிலையில் வர்த்தகம் பாதித்து கடன்களை உரிய காலத்திற்குள் செலுத்துவது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வன ங்க ளால் இயலாததாகிறது. அமெரிக்கா,  ஐரோப்பா போன்ற நாடுகள் கடன் செலுத்துவதில்  நிறுவன ங்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.


அதேபோல் இந்திய அரசும் நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்க ளிடம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன் தவணைகளுக்கு விலக்கு அளிக்கவும்,  ஜி.எஸ்.டி வட்டி விகிதங்களை குறைக்கவும் தமாகா  இளைஞரணி சார்பாக கேட்டுக்கொண்டனர்.