கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாகர்கோவில்,


கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு இல்லை. கொரோனா தொற்றினை முற்றிலுமாக அகற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வட நேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 20.04.2020க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் ம் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து தொற்றினை முற்றிலுமாக அகற்ற பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் அரசுக்கு தொடர்ந்து ழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


     


மாவட்டத்தில் மொத்தம் 918 பேர் கொரோனா நோய்த்தொற்று சந்தேகப் பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டு பயப்பட்டு உள்ளனர். இதில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 701 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை மீதம் உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதாபார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட த்தில் மொத்தம் 566 நபர்கள் தனமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதில் 353 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், 213 நபர்கள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களோடு தொடர்பில் இருந்ததால் அவர்களும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ரப்பர் உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ரப்பர் ஷீட்டுகளை ஒழுங்குமுறை விற்பனை கப் கூடத்தில் இருப்பு வைத்து அதற்குரிய பொருளீட்டு கடன் பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருளீட்டுக் கடனுக்கு ஒரு மாத காலம் வரை வட்டி கிடையாது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பினை அமைப்புசாரா தொழிலாளர் பதிவு அட்டையை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.