கார்திக் சிதம்பரத்திடம் ரூ.20 கோடியை திரும்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு

 



வெளிநாடு செல்வதற்காக கார்த்திக் சிதம்பரம் செலுத்திய ஜாமீன் தொகை  20 கோடி ரூபாயை  திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


கடந்த 2006 ஆம் ஆண்டு, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விசாரனை நடத்திக்கொண்டு வருகின்றது. 


இதனிடையே கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு சென்று வருவதற்காக கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் கருவூலத்தில் .வைப்புத் தொகையாக 20 கோடி ரூபாயை செலுத்திவிட்டு செல்லுமாறு உத்தரவிட்டது. 


நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திக் சிதம்பரம் வைப்புத் தொகையை செலுத்திவிட்டு வெளிநாடு சென்றார். 


பின்னர் நாடு திரும்பிய கார்த்திக் சிதம்பரம் வைப்புக் தொகையை திரும்ப தருமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்திக் சிதம்பரத்திடம் ரூ.20 கோடியை திரும்பி தர உத்தரவிட்டது.