குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றது.
இதில் சென்னையில் கடந்த 7ஆம் தேதி சிஏஏவுக்கு ஆதரவாகப் பா.ஜ.க பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்க அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது. ஆனால் அதிமுக, பாமக ஆகிய முக்கியக் கூட்டணிக் கட்சிகள் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “கூட்டணி இருந்தாலும் கொள்கை மாறுபாடுகள் உள்ளன. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் நலனைப் பாதுகாக்கும் வகையில்தான் அதிமுகவின் கொள்கை உள்ளது.கூட்டணி வேறு, கொள்கைகள் என்பது வேறு என்று அதிரடியாக கூறியுள்ளார்.
சிஏஏவுக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையயில் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.