அண்மை காலத்தில் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் மேல் வரி ஏய்ப்பு புகார்கள் அதிகரித்து வருவதால் 50க்கும் மேற்பட்ட வேலம்மாள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திக்கொண்டு வருகின்றனர் .
வேலம்மாள் குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சோதனையில் பல முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தீவிர சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.