சென்னை,
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைக் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். இதன்பின்னர், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர் ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.