வாக்காளர் அட்டையில் நாயின் புகைப்படம்- அதிகாரிகளின் மெத்தன போக்கு

மேற்கு வங்கம்,


மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம் நகர் கிராமத்தை சேர்ந்த முதியவர் சுனில் கர்மாகர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தார்.


திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அடையாள அட்டையில் அவரது படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்தது சுனிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து அதிகாரிகளிடம் சுனில் முறையிட்டார்.



மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது வாக்காளர் அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அதிகாரி என் படத்திற்கு பதிலாக நாய் புகைப்படம் இருப்பதை கவனிக்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன் என கூறினார்.

ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது, அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது. அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய வி‌ஷயம், விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி கூறினார்.