சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஐகோர்ட்டில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர்.
இதையடுத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத் தண்ணீர் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞா னம், வக்கீல் சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.எல். சுந்த ரேசன், ஜி.மோகன கிருஷ்ணன், ஆர்.சுதா, கிருஷ்ணகுமார், லூயிஸ் சால் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜாமீன், முன் ஜாமீன் உள்ளிட்ட அவசர வழக்குகள் மட்டுமே இன்று முதல் விசாரணைக்கு எடுத் து கொள்ளப்படும். அதுவும் முக்கிய வழக்கு களை ஒரே தண்ணீர் அதிகரிப்பு நீதிபதி விசாரிப்பதற்கு பதில் பல நீதிபதிகளுக்கு வழக் குகளை பிரித்து கொடுத்து விரைவாக விசாரித்து முடிக்க ப்படும். பொதுமக்கள், அரசு அதிகாரிகளை தேவை யில்லாமல் ஐகோர்ட்டுக்குள் அனுமதிக்கூடாது.
கோர்ட்டு அறைகளில் கூட்டம் அதிகம் இருக்க கூடாது என்பது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான உத்தரவு நேற்று மாலையில் ஐகோர்ட்டு பிறப்பிக்க உள்ளது.